திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkகிரிக்கெட் மைதானத்தில் ‘2 years of worst திராவிட மாடல்’ என்ற பதாகை காண்பிக்கப்பட்டதாக பரவும்...

கிரிக்கெட் மைதானத்தில் ‘2 years of worst திராவிட மாடல்’ என்ற பதாகை காண்பிக்கப்பட்டதாக பரவும் எடிட் படம்!   

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கிரிக்கெட் மைதானத்தில் ‘2 years of worst திராவிட மாடல்’ என்ற பதாகை காண்பிக்கப்பட்டது.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் ‘2 years of worst திராவிட மாடல்’ என்று எழுதப்பட்டிருந்த பதாகை ஒன்றை கிரிக்கெட் மைதானத்தில் காண்பித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 2 years of worst திராவிட மாடல் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக வைரலாகும் புகைப்படம்
Screenshot from Twitter@IndiraniSudala1
 2 years of worst திராவிட மாடல் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக வைரலாகும் புகைப்படம்
Screenshot from Facebook/Siva Kumar
 2 years of worst திராவிட மாடல் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக வைரலாகும் புகைப்படம்
Screenshot from Facebook/Radha

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?

Fact Check/Verification

2 years of worst திராவிட மாடல் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதுக்குறித்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இதில் அப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. கடந்த சனிக்கிழமையன்று (06/05/2022) சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-மும்பை அணிகளுக்கிடையே நடந்த போட்டியின் போது ‘2 years of திராவிட மாடல்’ என்று எழுதப்பட்ட பதாகையை இளைஞர் ஒருவர் காட்டியதாக புகைப்படத்துடன் ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 2 years of worst திராவிட மாடல் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from One India Tamil

உண்மையான படத்தில் Worst’ என்ற வார்த்தையை சேர்த்து வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்த படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!

Conclusion

‘2 years of worst திராவிட மாடல்’ என்று எழுதப்பட்டிருந்த பதாகையை கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் காண்பித்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from One India Tamil, Dated May 06, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular