Saturday, December 20, 2025

Fact Check

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து பணம் வாங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் என்ற வீடியோ தகவல் உண்மையா?

banner_image

Claim

image

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து பணம் வாங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்

Fact

image

வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமாகும். குறிப்பிட்ட நபருக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் எல்லை பாதுகாப்பு படை வீரரும் இல்லை.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து பணம் வாங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“இவர் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் கேரளாவுக்கு ரயிலில் தனது ஊருக்கு போகும் போது 46 லட்சம் ரூபாயுடன் பிடிபட்டார் அவரது வீட்டில் சோதனை செய்ததில் ரூபாய் 962 கோடி சிக்கி இருக்கிறது நமது பாரத நாட்டை காட்டிக் கொடுக்க பாகிஸ்தானிடம் இருந்து பெற்ற கைக்கூலி இவர்தான் கருப்புஆடு” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @NaMo_Bharathan

X Link/Archived Link

Screenshot from X @SATHYA34729298

X Link/Archived Link

Screenshot from X @rnsaai

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையானதா?

Fact Check/Verification

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து பணம் வாங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 27, 2018 அன்று taak jhaank என்கிற யூடியூப் பக்கத்தில் “Breaking News 96.40 crore Recovered from Anand khatri builder of kanpur” என்று இந்த வீடியோ பதிவாகியிருந்தது.

தொடர்ந்து, நம்முடைய தேடலில் ” Kanpur: All accused arrested in connection with recovery of Rs 96 crores in demonetised currency, sent to jail, booked under several sections.” என்று இந்த நபர் குறித்த செய்தி ANI News UPல் இடம்பெற்றிருந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 96 கோடி ரூபாய், ஆனந்த் கத்ரி என்கிற கட்டிட அமைப்பாளர் ஒருவருடைய வீட்டில் கிடைத்த நிலையில் அவர் உட்பட 16க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகியுள்ளது.

ஆனால், இவர்களுக்கும் எல்லை பாதுகாப்பு படைக்கும், பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இந்த 2018ஆம் ஆண்டு நிகழ்வுடன் தொடர்புடைய வீடியோவே தற்போது எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாகிஸ்தானிடம் உளவு பார்க்க பணம் பெற்றதாகப் பரவி வருகிறது.

Also Read: என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறினாரா?

Conclusion

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து பணம் வாங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
YouTube Video From, taak jhaank, Dated January 27, 2018
X Post from, ANI UP/Uttarakhand, Dated January 17, 2018
Report From, ABP Live, Dated January 17, 2018

RESULT
imageFalse
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage