Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் வரவிருக்கும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக கூறி சன் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதனைப் பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக தகவல் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்ததா என்பதை அறிய, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடினோம்.
இத்தேடலில், வார நாட்களில் இரவு ஊரடங்கும் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை), வரும் ஞாயிறு (09/01/2021) மட்டும் முழு ஊரடங்கும் போட தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு என்று பரப்பப்படும் தகவல் தவறான ஒன்று என்பது உறுதியாகின்றது.
உண்மை இவ்வாறு இருக்க சன் நியூஸ் எதற்காக இவ்வாறு ஒரு பொய் தகவலை நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து சன் நியூஸ் உண்மையாகவே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என்பதை அறிய, அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது அல்ல, அது கடந்த வருடம் ஏப்ரல் 18 அன்று கொரானா பரவலின் இரண்டாம் அலையின் போது வெளியிடப்பட்டது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால் கடந்த வருடம் வெளிவந்த நியூஸ்கார்டை பயன்படுத்தி தமிழகத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுகின்றது.
Also Read: தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கா?
தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Tamilnadu Government Press Release
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025