ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஇந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது...

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்றாரா அமித் ஷா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Source: Facebook

தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. பாகிஸ்தானில் அல்ல என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்றாரா ஹெச்.ராஜா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அமித் ஷா மேற்கண்ட கூற்றை கூறி இருந்தால் அது தேசிய அளவிலும் மாநில மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறி இருக்கும். ஆனால் இவ்வாறு அமித் ஷா கூறியதாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இது பொய்யான தகவல் என்று பதிலளித்தனர்.

இதனையடுத்து ஜெயா பிளஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என உறுதி செய்ய ஜெயா பிளஸின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் நியூஸ்கார்டை ஜெயா பிளஸ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக, நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடந்ததாக இந்நிறுவனம் நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

Archive Link

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

Conclusion

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False/Fabricated

Source

Newschecker Conversation
Jaya Plus


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular