புதன்கிழமை, ஏப்ரல் 17, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 17, 2024

HomeFact CheckFact Check: பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று கூறினாரா...

Fact Check: பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று கூறினாரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

Fact
பரவிய செய்தி தவறானதாகும். இடைநிற்றல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்குவது குறித்து பேசியிருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது.

“ஆண்டுக்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி” என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி பலராலும் பகிரப்பட்ட நிலையில் தந்தி டிவி இந்த செய்தி ட்விட்டை நீக்கி விட்டது. எனினும், இந்த செய்தி வைரலாகி வருகிறது.

Screenshot from Facebook/vijay.sachin.1293
Screenshot from Facebook/nachiyaar2.0
Screenshot from Facebook/sankararaman.mayiladuthurai

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Fact Check/Verification

பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதியன்று துவங்கியது. தேர்வு முதல்நாளே 49,559 மாணவர்கள் தேர்விற்கு விடுப்பு எடுத்திருந்தனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மார்ச் 16ஆம் தேதியன்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றின் பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பொதுத்தேர்விற்கு மாணவர்கள் வராததற்கான காரணங்கள் உட்பட பலவற்றிற்கு விளக்கமளித்தார். அதில், “2021-22ஆம் கல்வியாண்டில் நாம் ஆராய்ந்த வரையில் பள்ளி இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். ஆனால், இடைநின்றலில் கண்டறியப்பட்ட மாணவர்களில் சிலர் 2022-23 கல்வியாண்டில் 4 முதல் 5 நாட்கள் மட்டுமே மொத்தமாகவே பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். எனினும், அவ்வாறு வருகை பதிவு குறைவாக உள்ள இடைநிற்றல் மாணவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஏனெனில், அவர்களை தேர்வு எழுத அனுமதிச்சீட்டே வழங்காமல் அந்த மாணவர்களை தடுத்தால் அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவே முடியாது. அவர்களுடைய கல்வியும் பாதிக்கப்படும். இடைநிற்றல் மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயம் அல்லது சமூகம், பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளோம்” என்று பேசியிருந்தார்.

இவ்வாறு, இடைநிற்றல் மாணவர்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய செய்தியே தவறாக பரவி வருகிறது. 3 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தாலும் தேர்வு எழுதலாம் என்கிற செய்தி பரவிய நிலையில் இதுகுறித்து “பரவும் தகவல் தவறானது என்று விளக்கமளித்துள்ளார் அன்பில் மகேஷ்.

Also Read: Fact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா பாஜக ஹெச்.ராஜா?

Conclusion

பள்ளிக்கு மாணவர்கள் 3 நாட்கள் வந்தாலே தேர்வு எழுத அனுமதி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, Kalaingnar News, Dated March 16, 2023
YouTube Video From, Sun News, Dated March March 16, 2023
News Report From, News 18 Tamil Nadu, Dated March 13, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular