புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் திரிபுக்கு ‘ஓமைக்ரான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா மற்றும் சில நாடுகளில் மிக வேகமாக இந்த வைரஸ் திரிபு பரவி வருகின்ற நிலையில் உலக சுகாதார நிறுவனம் மற்ற நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. ஓமைக்ரான் குறித்த வதந்திகளும் வைரஸ் திரிபை விட அதிகமாக பரவத் துவங்கியுள்ளன.
அந்தவகையில், “தமிழக மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு. சற்று முன் வந்த தகவல். புதிய வகை கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும். அதிரடி முடிவு, அன்பில் மகேஷ்” என்கிற செய்தியுடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி
Fact check/ Verification
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
உயர்கல்வித்துறைக்கு அமைச்சர் பொன்முடி உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்ததாக தவறாக இதில் செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும், சன்நியூஸ் லோகோவைப் பயன்படுத்து இருந்தாலும் கூட வார்த்தைகளில் தவறுகள் அதிகமாக உள்ளன.
எனவே, சன்நியூஸ் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பாசிரியர் மனோஜிடம் இதைப்பற்றிக் கேட்டோம். அப்போது அவர், “குறிப்பிட்ட செய்தி போலியானது; இந்த நியூஸ் கார்டினை நாங்கள் வெளியிடவில்லை” என்று நமக்குத் தெரிவித்தார்.
மேலும், பள்ளிகள் காலவரையின்றி மூடப்படும் என்கிற செய்தி குறித்து செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், “குறிப்பிட்ட செய்தி தவறானது” என்று விளக்கமளித்துள்ளார்.
Conclusion:
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாகப் பரவும் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Manoj, Sun News
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)