கேஸ் விலை அதிகரித்தால் விறகடுப்பை பயன்படுத்துங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தில் 875 ரூபாய் 50 காசாக அதிகரித்தது. தற்போது மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் “நம் முன்னோர்கள் என்ன கேஸ் அடுப்பிலா சமைத்தார்கள்? கேஸ் வாங்கா முடியாவிடில் விறகடுப்பை பயன்படுத்துங்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Facebook Link

Facebook Link

Facebook Link
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் பறிமுதல் செய்ததா திமுக அரசு?
Fact Check/Verification
கேஸ் விலை அதிகரித்தால் விறகடுப்பை பயன்படுத்துங்கள் என்று தமிழக பாஜக தலைவர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. கதிர் நியூஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்திருந்தது.
Conclusion
கேஸ் விலை அதிகரித்தால் விறகடுப்பை பயன்படுத்துங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைராகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)