Friday, April 25, 2025

Fact Check

அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பொய் தகவல்!

banner_image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பரவும் தகவல்
Source: Facebook

இதற்கு முன் தமிழக பாஜகவின் தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்திரராஜனும் எல்.முருகனும் மத்திய அரசின் ஆதரவில்  தற்போது ஆளுநராகவும் மத்திய அமைச்சராகவும் இருக்கன்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போதைய தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் ஆளுநராகவிருக்கின்றார் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்நியன்ஸ் எனும் இணையத்தளம், ஆளுநர் ஆகிறார் அண்ணாமலை – பிரதமர் மோடி கொடுக்கும் கிப்ட்?” என்று தலைப்பிட்டு இச்செய்தியை நியூஸ்கார்டாக வெளியிட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பரவும் தகவல் - 1

Facebook Link

இந்த நியூஸ்கார்டை பலரும் உண்மை என்று நம்பி இதுகுறித்த தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பரவும் தகவல் - 2

Facebook Link

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பரவும் தகவல் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக வைரலாகும்  செய்தியில் ஏதேனும் உண்மையுள்ளதா என்பதை உறுதி செய்ய பொது ஊடகங்களில் இதுகுறித்து தேடினோம். இதில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர் இது பொய்யான தகவல் என்று பதிலளித்தார்.

இதனையடுத்து எதன் அடிப்படையில் அந்நியன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்பதை அறிய, அந்நியன் இணையத்தளத்தை ஆய்வு செய்தோம். அதில் அந்த இணையத்தளம் இத்தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தததை காண முடிந்தது.

Article's Headline
Screenshot od Article’s Headline

அச்செய்தியை ஆய்வு செய்கையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு குறித்த செய்தி அதில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

இச்செய்தியில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மற்றும் தெலங்கானா கவர்னர் ஆகி விட்டார். அதே போல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராகி விட்டார். அந்த வகையில் அந்தமான் கவர்னர் பதவியை குறி வைத்து அண்ணாமலை தற்போது காய் நகர்த்தி வருகிறார்.

தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகனுக்கு கிடைத்தது போல் தனக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என்றும், அதை பெறுவதற்காக அண்ணாமலை துடிக்கிறார். அதனால் தான் அவர், திமுக மீது தினமும் குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை தான். அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள். இவரும் ஒரு சித்தராக இருக்கலாம். என்று  ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Article's Snippet
Screenshot od Article’s Snippet

ஈவிகே எஸ் இளங்கோவன் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேற்கண்ட கருத்துகளை பேசினார் என்பது உண்மையே. ஆனால் இக்கருத்துகளுக்கும் இக்கட்டுரையின் தலைப்புக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

உண்மையான செய்திக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத தவறான ஒரு தலைப்பிட்டு அந்நியன் இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. கூடவே இத்தலைப்பை மட்டும் குறிப்பிட்டு, செய்தியை குறிப்பிடாமல் நியூஸ்கார்டையும் வெளியிட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டை மட்டும் பார்ப்பவர்களுக்கு அண்ணாமலைக்கு ஆளுநர் பதவி கிடைக்கப்போவதாகவே தோன்றும். இது உண்மைக்கு முரணானது.

இதனடிப்படையில் பார்க்கும்போது அண்ணாமலைக்கு ஆளுநர் பதவி கிடைக்க போவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.

Also Read: கடத்தல் மண் எடுத்து தரப்படும்; வைரலாகும் பெயர் பலகையின் உண்மை பின்னணி!

Conclusion

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

 ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Source

Newschecker Conversations
EVKS Ilangovan Pressmeet


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,898

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.