வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஎரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றாரா அண்ணாமலை?

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

“பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவுவேன்” என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: எரிபொருள் விலையுயர்வால் மக்கள் கஷ்டப்பட்டால் கவலையில்லை என்றாரா அண்ணாமலை?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது ஆன்லைன் ஊடகமான தமிழ்கேள்வியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், உண்மையிலேயே அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில்  தமிழ்கேள்வி ஆன்லைன் ஊடகத்தை நடத்தி வரும் ஊடகவியலாளர் செந்தில்வேல் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை  காண முடிந்தது.

Archive Link

இதனையடுத்து பாஜக சமூக ஊடக அணி தலைவர் சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அவரும் இத்தகவல் பொய்யானது என உறுதி செய்தார்.

Also Read: பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியவர் இந்தியரா? உண்மை என்ன?

Conclusion

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என நம் ஆய்வில் கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Newschecker Conversations
Tamilkelvi Senthil’s Tweet on 26/03/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular