சனிக்கிழமை, ஜூன் 29, 2024
சனிக்கிழமை, ஜூன் 29, 2024

HomeFact Checkஅண்ணாமலை ஒரு பூத்தில் 'ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா?

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினார்.

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

2024 பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி கடிதம் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அக்கடிதத்தில் ‘BCUAF 07464’ என்கிற இயந்திரத்தில் அண்ணாமலைக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டும் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தை காண முடிந்தது.

அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த  ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல்

Archive Link

அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த  ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாதக-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு உண்மையானதா?

Fact Check/Verification

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த  ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அத்தகவல் குறித்து தேடினோம்.

இத்தேடலில் தமிழக பாஜக இளைஞர் அணியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் பிரவீன்ராஜ் என்பவர் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறி உண்மையான கடிதத்தின் படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.

அப்படத்தில் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 கிடைத்ததாக  குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த  ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் கோவை மக்களவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை என்று சன் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் அதே கடிதத்தின் புகைப்படம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அக்கடிதத்திலும் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 கிடைத்ததாகவே  குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த  ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல்

இதனடிப்படையில் பார்க்கையில் அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த  ஓட்டு’ மட்டும் வாங்கியதாக பரப்பப்படும் கடிதத்தின் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பது நமக்கு தெளிவாகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கடிதத்தின் படத்தையும் எடிட் செய்து மாற்றப்பட்ட கடிதத்தின் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல உள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த  ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த பூத்தில் அண்ணாமலை 101 ஓட்டு வாங்கியுள்ளார்.. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
X Post from Pravin Raj, Social Media Incharge, BJP Youth Wing, Dated June 04, 2024
X Post from Sun News, Dated June 04, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular