Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்றார் அண்ணாமலை
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும், ஏபிபி நாடு தரப்பும் தெளிவு செய்துள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பொழிந்த கனமழை காரணமாக ஏராளமான பொருட்சேதங்கள் ஏற்பட்டது. எனவே தென் தமிழக மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்திருந்தார்.
இருப்பினும் தூத்துக்குடியில் நேற்று இதே கோரிக்கையை மக்கள் வைத்தனர். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் ‘தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை’ என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், “Beggars cannot be choosers”ஆங்கில பழமொழி உண்டு. இதை உதயநிதி மற்றும் தமிழ்நாட்டினர் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?
தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.
இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஏபிபி நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள தேதியில் (25/12/2023), “திமுக அரசு வேண்டுமென்றே மத்திய அரசை வாய் சண்டைக்கும், வம்பு சண்டைக்கும் இழுக்கிறார்கள்” என்று அண்ணாமலை பேசியதாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து ஏபிபி நாடின் ஆசிரியர் சண்முக சுந்தரத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
இதனை தொடர்ந்து ஏபிபி நாடின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இந்த நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.
Also Read: இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post from ABP Nadu, Dated December 25, 2023
X post from ABP Nadu, Dated December 27, 2023
Phone Conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP
Phone Conversation with Shanmuga Sundaram, Editor, ABP Nadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Ramkumar Kaliamurthy
March 26, 2025
Ramkumar Kaliamurthy
March 18, 2025