Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஆளுநரின் செயல் ஆட்சேபத்திற்குரியது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து இன்று பாதியில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், “ஆளுநரின் செயல் ஆட்சேபத்திற்குரியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் கீழ்த்தரமாக குற்றம் சாட்டப்பட்டபோது கூட அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி ஜனநாயக மரபுகளை மீறியதில்லை. ஆனால், இன்றைய ஆளுநர் அவையின் மரபுகளை மீறியிருக்கிறார். ஒரு தமிழனாக இதை ஆட்சேபிக்கிறேன்” என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?
ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டோம்.
ஜூனியர் விகடன் பெயரில் குறிப்பிட்ட நியூஸ்கார்ட் பரவிய நிலையில், அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்தபோது அதில் நயினார் நாகேந்திரன் குறித்த நியூஸ்கார்ட் இடம்பெறவில்லை.
தொடர்ந்து, இதுகுறித்து விகடன் டிஜிட்டல் ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது வைரலாகும் நயினார் நாகேந்திரன் குறித்த நியூஸ்கார்ட் “போலியானது” என்று விளக்கமளித்தார்.
மேலும், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், வைரலாகும் நியூஸ்கார்ட் “போலியானது” என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நாமும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நியூஸ்கார்ட் “போலியானது” என்று உறுதி செய்து கொண்டோம்.
Also Read: லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!
ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post, From CTR.Nirmal Kumar, State President IT & Social Media, Dated January 09, 2023
Phone Conversation, With I.Britto, Vikatan Digital Head, Dated 09, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 1, 2025
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Ramkumar Kaliamurthy
June 3, 2025