Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத்தில் இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நியூஸ்செக்கரின் ஹெல்ப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணிற்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில், இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகப்படுத்துள்ளதாகவும், இத்திட்டத்திற்கு பிளட் ஆன் கால் என்று பெயரிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 104 என்கிற எண்ணை அழைத்தால் 40 கிமீ சுற்றளவில் நான்கு மணி நேரத்திற்குள் ரத்தம் வழங்கப்படும் எனவும் இதற்கு கட்டணமாக பாட்டிலுக்கு 450 ரூபாயுடன் போக்குவரத்து செலவாக 100 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்ததையும் காண முடிந்தது.
Also Read: மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்றாரா வைகோ?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழகத்தில் இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக பிளட் ஆன் கால் எனும் பெயரில் தமிழகத்தில் திட்டம் ஏதேனும் நடைமுறையில் உள்ளதா என்பதை தேடினோம். இதில் தமிழகத்தில் இவ்வாறு ஒரு திட்டம் இருப்பதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து 104 என்ற ஹெல்ப்லைன் எண் குறித்து தேடுகையில், அது தமிழகத்தில் கோவிட் நோயாளிகளுக்கு தேவையான தடுப்பூசி, மருந்துகள், ஆக்ஸிஜன் படுக்கை உள்ளிட்ட தேவைகளுக்காக தொடர்புக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஹெல்ப்லைன் எண் என்பதை தமிழக அரசின் கோவிட் உதவி இணையத்தளம் மூலம் அறிய முடிந்தது.
தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, தெலங்கானா, பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், சிக்கிம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி, இலட்சத்தீவு, தாத்ரா, நகர் ஹவேலி, மற்றும் டையூ, டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் 104 என்கிற எண் கோவிட் ஹெல்ப்லைன் எண்ணாகவே பயன்படுத்தப்படுகின்றது என்பதை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையததளம் மூலம் அறிய முடிந்தது.
தமிழகத்தில் பிளட் ஆன் கால் எனும் சேவை நடப்பில் இல்லை என்பது உறுதியாகியப்பின், நாட்டின் வேறு பகுதியில் இச்சேவை உள்ளதா என்று தேடினோம். இதில் மகாராஷ்டிராவில் இச்சேவை நடைமுறையில் உள்ளது என்பதை மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் அறிய முடிந்தது.
இத்திட்டம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே படிக்கலாம்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சமூக தவறாக பரப்பப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: கனிமொழி திமுகவிலிருந்து விலகுகின்றாரா?
தமிழகத்தில் இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரங்களின் மூலம் தெளிவாக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tamilnadu Official Website
Maharashtra Official Website
Central Helpline
Indian Express Article
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
January 10, 2023
Ramkumar Kaliamurthy
January 6, 2023