Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான வீடியோவின் வேகம் குறைக்கப்பட்டு வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கின்றது. இதற்கான பந்தல் கால் நடு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 04) நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மது அருந்திவிட்டு வந்தததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு புஸ்ஸி ஆனந்த் மது அருந்திவிட்டு வந்ததாக பரப்பப்படும் வீடியோவில் நியூஸ் தமிழின் லோகோ இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “தளபதி சொன்னபடி… பூஜை முடிந்த பின் புஸ்ஸி ஆனந்த் சொன்ன விஷயம்!” என்று தலைப்பிட்டு அவ்வீடியோவை நியூஸ் தமிழ் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் புஸ்ஸி ஆனந்த் வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் தெளிவற்று பேசவில்லை. மாறாக இயல்பாய் தெளிவாக பேசி இருந்தார்.
தொடர்ந்து தேடுகையில் இந்த நிகழ்ச்சியின்போது தந்தி தொலைக்காட்சிக்கு புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்திருந்த வீடியோ ஒன்றை காண முடிந்தது. இவ்வீடியோவிலும் புஸ்ஸி ஆனந்த் இயல்பாகவே பேசினார்.
இவற்றின்படி பார்க்கையில் புஸ்ஸி ஆனந்த் இயல்பாக பேசும் வீடியோவை எடிட் செய்து, அதன் வேகத்தை குறைத்து, அவர் குடிபோதையில் நிகழ்ச்சிக்கு வந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது என அறிய முடிகின்றது.
இதனையடுத்து தேடுகையில் தவெக செய்தித்தொடர்பாளர் லயோலா மணி வைரலாகும் தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?
தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு புஸ்ஸி ஆனந்த் மது அருந்திவிட்டு வந்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான வீடியோவின் வேகம் குறைக்கப்பட்டு வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post By News Tamil 24×7, Dated October 04, 2024
YouTube Video By Thanthi TV, Dated October 04, 2024
X Post By Loyola Mani, Spokesperson, TVK, Dated October 05, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
October 7, 2025
Ramkumar Kaliamurthy
October 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 6, 2025