வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkஇறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்றாரா அண்ணாமலை?

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்றாரா அண்ணாமலை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இறைவனின்
Source: Facebook

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது பூதலூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி மீது தேர் உரசியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொருவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் மீண்டும் மின்சாரத்தடை பிரச்சனை தீவிரமாகத் துவங்கியுள்ளது. இந்நிலையில், “மின்சாரத்தை நிறுத்து. தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் காப்புக் கட்டிய நாள்முதல் திருவிழா முடிந்து அந்த ஊர்களுக்கு விருந்தினர்களாக வந்துள்ள விருந்தாளிகள் அவரவர் ஊருக்குத் திரும்பும் நாள்வரை அந்த ஊருக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல. பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி” என்பதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இறைவனின்
Source: Facebook

Facebook Link

இறைவனின்
Source: Facebook

Facebook Link

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளதா துருக்கி?

Fact Check/Verification

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ்கார்டு ஜூனியர் விகடனுடையதாக வைரலாவதால் இதுகுறித்து ஜுனியர் விகடன் டிஜிட்டல் டீம் ஆசிரியர்களில் ஒருவரான பிரிட்டோவை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், வைரலாகும் நியூஸ்கார்டு விகடன் தரப்பில் வெளியிடப்பட்டதல்ல; அது போலியானது என்று உறுதி செய்தார்.

தொடர்ந்து, வைரல் நியூஸ்கார்டு குறித்து அண்ணாமலையின் முதன்மை செயலாளரான பிரபாகரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவரும், பரவும் நியூஸ்கார்டில் உள்ள செய்தி முற்றிலும் போலியானது என்று உறுதி செய்தார்.

Conclusion

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/Fabricated

Our Sources

Annamalai, President BJP TN
Junior Vikatan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular