சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkபிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக வதந்தி

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல்

இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த புதனன்று ( 08/12/2021) விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம்  13 பேர் உயிரிழந்தனர்.

Archive Link

இந்த விபத்து நடந்த தினத்தன்று கோவை கல்லூரி மாணவர்கள் சிலர் பிபின் ராவத் கொண்டாடியதாக மலையாள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் என்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியினை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/kcthirumaran/status/1469678503213744130

Archive Link

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல் - 1

Twitter Link | Archive Link

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல் - 2

Facebook Link

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக  தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில், சமூக ஊடகங்களில் பரவும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என நமக்கு தெரிய வந்தது.

கோவை நேரு கல்வி குழுமத்தின் கல்லூரியில், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்காக கல்லூரி விடுதியில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவையே பிபின் ராவத் மரணத்துடன் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இந்த நிகழ்வானது பிபின் ராவத் விபத்து நிகழ்வுக்கு முன்பே நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் அ.முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

எங்கள் நேரு கல்வி நிறுவனங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும், தனியார் ஊடகங்களிலும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் இந்திய முப்படை தளபதி மரண நிகழ்வில் எங்கள் மாணவர்களை தவறாக சித்தரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கின்றது.

கல்லூரியில் முதலாம் ஆண்டு புதிய மாணவர்களுக்காக கல்லூரி விடுதியில் மாணவர்களால் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது இந்த துக்க நிகழ்வுக்கு முன்பே நடத்தப்பட்டு விட்டது. இதை தவறாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் எங்களது மாணவர்களின் நாட்டுப்பற்றையும், இந்திய முப்படை தளபதியின் மரணத்தையும் சம்மந்தப்படுத்தி விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

எங்கள் கல்லூரியின் நிறுவனர் ஓய்வுப்பெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவார். மேலும் எங்கள் கல்லூரியின் பேராசிரியரகள், அதிகாரிகள் 50 விழுக்காட்டிற்கு மேல் இந்திய ராணுவம் , விமானப்படை அல்லது கப்பற்படையில் பணிபுரிந்தவர்களாவர்.

இந்த தவறான செய்தி எங்களையும், எங்கள் மாணவர்களையும், மற்ற கல்லூரி மாணவர்களையும் மனதளவில் காயப்படுத்தியுள்ளது. இந்த தவறான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல் குறித்த உண்மை

இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் இம்மாதம் 14 ஆம் தேதி  போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது,

“எங்கள் கல்லூரி விடுதியில் புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் வரவேற்பது என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வாகும். பழைய மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்து வரவேற்பர். இந்த நிகழ்வானது குனியமுத்தூர் ஆண்கள் விடுதியின் பழைய மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வானது விடுதி கண்காணிப்பாளரின் மேற்பார்வையிலேயே நடத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க மாணவர்கள் தொடர்பான விஷயம். இந்த நிகழ்வை  இந்திய தலைமைத் தளபதியின் மரணத்துடன் தொடர்புப் படுத்தி பொய்யான வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் (கர்மா நியூஸ்)பரப்பப்படுகின்றது. எப்படி ஒருவரால் ஒரு விஷயத்தை திரித்து கூற முடிகின்றது. ஆகவே இந்த இழிவான செயலை புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.”

இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் மூன்று பிரிவுகளுக்கின் கீழ் வழக்கு பதிந்து இதுக்குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை
Source: TN Police

Also Read: கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?

Conclusion

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக  சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Mr. A. Muralidharan, Director (Public Relations), Nehru Group of Institutions

Tamilnadu Police

(இந்த கட்டுரையில் முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீசார் விசாரனை குறித்த விபரங்கள் பின்னர் சேர்க்கப்பட்டது.)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular