Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றார் ஈபிஎஸ்.
இத்தகவல் தவறானது என்று அஇஅதிமுக தரப்பும், தினமலர் தரப்பும் தெளிவு செய்துள்ளது.
“நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃப் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றார் ஈபிஎஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.
இதனையடுத்து தேடுகையில் அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இந்த செய்தி தவறானது என்று மறுத்து பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அந்நிறுவனம் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து தினமலர் டிஜிட்டல் துறையை சார்ந்த தண்டபாணியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தினமலர் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்
Also Read: முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறினாரா?
சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று ஈபிஎஸ் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
X post by AIADMK IT Wing, Dated April 18, 2025
Phone Conversation with Dhandapani, Dinamalar
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
April 14, 2025
Ramkumar Kaliamurthy
April 4, 2025