Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்பதாக தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்ற்ம் சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இந்திய நாட்டின் 73வது குடியரசு தினம் நெருங்கி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகளுக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவிருந்த அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசுதின விழாவில் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளப் பிரிவு தலைவரான சிடிஆர்.நிர்மல் குமார், “தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை. வட மாநில மக்கள் மட்டுமே தேசபக்தி உடையவர்கள். தென்னிந்திய மக்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு தேசபக்தி இல்லை. தமிழர்களால் தேச நலனுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரமா இது? உண்மை என்ன?
தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்று தமிழ்நாடு பாஜக சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் பரவியதால் தந்தி டிவி தரப்பில் கேட்டபோது வைரல் நியூஸ் கார்டு “போலியானது” என்று நமக்கு உறுதி செய்தனர்.
மேலும், சிடிஆர்.நிர்மல் குமார் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்ட நியூஸ் கார்டினை ஷேர் செய்து, “”சமூக ஊடகப் பிரிவு” திமுகவில் தான் “அணி”, அடுத்த போலி கார்டு போடும் போது நினைவில் கொள்ளவும்.” என்று பதிவிட்டுள்ளார். அவரது தரப்பிலும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்து கொண்டோம்.
தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்று தமிழ்நாடு பாஜக சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 19, 2024
Vijayalakshmi Balasubramaniyan
October 30, 2023
Vijayalakshmi Balasubramaniyan
March 29, 2023