Monday, April 28, 2025

Fact Check

கோமிய பானம் மூலமாக மக்களின் தாகம் தீர்ப்போம் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

banner_image

Claim
கோமிய பானம் மூலமாக சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்போம் – அண்ணாமலை அறிக்கை.

Fact
பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையான அறிக்கையில் மோர் பந்தல் என்றே இடம்பெற்றுள்ளது.

கோமிய பானம் மூலமாக சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்போம் என்று பாஜக தமிழ்நாடு சார்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

இதுகுறித்து,நம்முடைய NewsChecker டிப்லைனில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். சமூக வலைத்தளங்களிலும் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot from TipLine
Screenshot from Twitter @PeriyaKuttoosi
Screenshot from Facebook/Faizal Faizal

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தி எம்பி, எம்எல்ஏ தகுதி இழப்புத் தீர்ப்புக்கு எதிரான மசோதாவை 2013ல் கிழித்தெறிந்தாரா? உண்மை என்ன?

Factcheck / Verification

கோமிய பானம் மூலமாக சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்போம் என பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிக்கை என்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

பாஜக தமிழ்நாடு அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை இதுகுறித்து ஆராய்ந்தபோது, ”மோர் பந்தல்களை அமைத்து தினசரி பராமரிக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க தயாராவோம்” என்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையும் இதனைத் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட அறிக்கையையே, மோர் பந்தல் என்பதற்கு பதிலாக கோமிய பானம் என்பதாகவும், அவை வெவ்வேறு சுவைகளில் வழங்கப்பட இருப்பதாகவும் எடிட் செய்து பரப்பில் வருகின்றனர்.

Original Statement
Edited Statement

தொடர்ந்து, இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் அவருடைய செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் அறிக்கை போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார்.

Also Read: தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

கோமிய பானம் மூலமாக சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்போம் என பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிக்கை என்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, BJP Tamil Nadu, Dated March 27, 2023
Twitter Post From, Annamalai, Dated March 27, 2023
Phone Conversation With, Prabhakar, Annamalai PA, Dated March 29, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,946

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage