சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஇங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்திய பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்திய பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இங்கிலாந்து அரசு விருந்தில் முதல்முறையாக அமர வைக்கப்பட்ட பெருமையைப் பெறுகின்ற இந்தியப் பிரதமர் மோடி

Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். 

இங்கிலாந்து அரசு விருந்தில் முதல்முறையாக அமர வைக்கப்பட்ட பெருமையைப் பெறுகின்ற இந்தியப் பிரதமர் மோடி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”*இங்கிலாந்து அரசு நமது நாட்டுப் பிரதமரை அவர்களுடன் தங்கள் வீட்டில் விருந்தில் உட்கார வைப்பது இதுவே முதல் முறை. மேலும் அரச குடும்பத்தினர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது அவரது நல்ல ஆளுமைக்கு கிடைத்த மரியாதை.இது பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

இங்கிலாந்து
Screenshot from X @NaMo_Bharathan

Archived Link

Screenshot from Facebook/thachaimariappanbjp

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

இங்கிலாந்து அரச குடும்ப விருந்தில் முதல்முறையாக கவுரவிக்கப்பட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் மோடி டென்மார்க் அரச குடும்பத்தை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அது என்பது நமக்கு உறுதியானது.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் “Met Her Majesty, the Queen of the Kingdom of Denmark, Margrethe II in Copenhagen.” என்று இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் கடந்த மே, 2022 அன்று இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்த செய்திகளை இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே 02-04 வரையில் பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மே 03 மற்றும் 04ஆம் தேதியன்று டென்மார்க் சென்ற பிரதமர் மோடி டென்மார்க் ராணி மார்கரெட் II அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.  20 வருடங்களுக்கு பிறகு ஒரு இந்தியப் பிரதமர் டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக டென்மார்க் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் டென்மார்க் சென்றுள்ளனர்.

மேலும், நம்முடைய தேடலில் இங்கிலாந்து அரச குடும்பம் சார்பிலும் பிரதமர் மோடி பலமுறை பக்கிங்காம் அரண்மனைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு முன்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இங்கிலாந்து அரச குடும்ப மரியாதையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!

Conclusion

இங்கிலாந்து அரச குடும்ப விருந்தில் முதல்முறையாக கவுரவிக்கப்பட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from PM Narendra Modi, Dated May 04, 2022
X post from PM Narendra Modi, Dated November 13, 2015
Announcement From, Ministry of Foreign affairs of Denmark


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular