சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஉலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்றாரா ரோஹித் சர்மா?

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்றாரா ரோஹித் சர்மா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்றார் ரோஹித் சர்மா

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு முற்றிலும் போலியானதாகும். புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.

2023 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நேற்றைய முன்தினம் அகமதாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 6 ஆவது முறையாக கோப்பையை தட்டி சென்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “அடுத்த உலகக்கோப்பையில் நான் விளையாடுவேனா என்று தெரியாது; உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது”  என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக பரவும் நியூஸ்கார்டு

Twitter Link | Archived Link

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக பரவும் நியூஸ்கார்டு

Facebook Link

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக பரவும் நியூஸ்கார்டு

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?

Fact Check/Verification

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம். இந்த ஆய்வில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா எந்த ஒரு பத்திரிக்கை சந்திப்பும் நடத்தவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து ஏதாவது நேர்காணல் அல்லது சமூக ஊடக பதிவின் வழியாக இத்தகவலை தெரிவித்தாரா என தேடினோம். இதில் ரோஹித் சர்மா எந்த ஒரு நேர்காணலும் சமீபத்தில் கொடுத்ததாக எந்த தரவும் இல்லை. அதேபோல் நவம்பர் 16 ஆம் தேதிக்கு பின்  எந்த ஒரு பதிவும் அவரது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டிருக்கப்படவில்லை.

மேலும் எந்த ஒரு ஊடகமும் ரோஹித் சர்மா இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்

Also Read: ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?

Conclusion

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு முற்றிலும் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Update:

மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக என்று போலியான நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து, “உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் திமுகவே இருக்கக்கூடாது” என்று ரோஹித் சர்மா கூறியதாக மற்றொரு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தலைங்களில் வைரலாகி வருகின்றது.

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக பரவும் நியூஸ்கார்டு

இந்த நியூஸ்கார்டும் போலியானது என்று புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானி உறுதி செய்துள்ளார்.

Our Sources
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Self Analysis


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular