வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkஎல்.முருகன் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று கூறினாரா?

எல்.முருகன் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

எல்.முருகன் குறித்து பரவும் செய்தி

Fact Check/ Verification

அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று கூறியதாக புதிய தலைமுறையின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

https://www.facebook.com/prithiviraj.prithiviraj.566790/posts/251505109645556
https://www.facebook.com/mohamed.sidik1/posts/3618347018255604

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புதிய தலைமுறையின் புகைப்படச் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை.

ஏனெனில் இந்த புதிய வேளாண் சட்டமானது மத்தியில் ஆளும் பாஜக அரசாலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி இருக்க தன் சொந்தக் கட்சி கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்து எல்.முருகன் அவர்கள் எவ்வாறு பேசி இருக்க முடியும்?

உண்மையை கூற வேண்டுமானால், வேளாண் சட்டங்களை ஆதரித்து எல்.முருகன் உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் தொடர்ந்து  பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புதிய தலைமுறை புகைப்படச் செய்தியானது பொய்யானதாகவோ அல்லது எடிட் செய்யப்பட்ட ஒன்றாகவோ இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.

இந்த சந்தேகத்தை உறுதி செய்ய புதிய தலைமுறையில் இச்செய்தி குறித்து தேடினோம்.

அவ்வாறு தேடியதில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தியானது எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

நம் தேடலில், பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் “பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது” என்று கூறியதாக புதிய தலைமுறையானது புகைப்படச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

இந்த புகைப்படச் செய்தியை எடிட் செய்துதான் பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் கூறியதாக மாற்றியுள்ளனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானச் செய்தியையும் எடிட் செய்யப்பட்ட செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இடது: உண்மையானப் புகைப்படம், வலது: எடிட் செய்யப்பட்டப் புகைப்படமாகும்.

Conclusion

பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தி பொய்யானது என்பதையும், அது எடிட் செய்யப்பட்டது என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/prithiviraj.prithiviraj.566790/posts/251505109645556

Facebook Profile: https://www.facebook.com/mohamed.sidik1/posts/3618347018255604

puthiya Thalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1345693750006222851


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular