Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மத்திய பட்ஜெட் 2021-22இல் தேர்தல் ஆணையத்தை வரும் நிதி ஆண்டிற்குள் தனியார் மயமாக்க முடிவெடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
கொரானா காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 01/02/2021 அன்று தாக்கல் செய்தார்.
பாஜக தவிர்த்து மற்ற கட்சியைச் சார்ந்தவர்கள் இந்த பட்ஜெட் குறித்து மிகப்பெரிய அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுக கழகம், IDBI வங்கி, பவன் ஹன்ஸ், கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இரண்டு பொதுத் துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் பங்கினை விற்று 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தையும் தனியாருக்கு விற்க மத்திய முடிவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.
Archive Link: https://archive.vn/DKxZc
Archive Link: https://archive.vn/10IQp
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தேர்தல் ஆணையம் என்பது இரயில்வே, ஏர் இந்தியா போன்று வருமானம் ஈட்டித் தரும் நிறுவனம் அல்ல. இது நீதித்துறை போன்ற ஒரு அரசு அமைப்பாகும். இதை யாரும் வாங்கவோ விற்கவோ இயலாது.
ஆகவே மத்திய பட்ஜெட்டில் தேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் கண்டிப்பாக பொய்யான ஒன்றாக இருக்க முடியும் என்று நாம் முடிவு செய்தோம்.
ஆயினும் இதை நிரூபிக்க சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புதியத் தலைமுறையின் புகைப்படச் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் இப்புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு பொய்யாக உருவாக்கப்பட்ட புகைப்படச் செய்தி என்பது நமக்கு உறுதியாகியது.
உண்மையான செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Archive Link: https://archive.vn/ZYeFv
வாசகர்களில் புரிதலுக்காக உண்மைப் புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
2021-22 ஆண்டின் மத்தியப் பட்ஜெட்டை பரிகசிப்பதற்காகவே விஷமிகள் இவ்வாறு ஒரு பொய்யனப் புகைப்படச் செய்தியை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
மத்திய பட்ஜெட் 2021-22இல் தேர்தல் ஆணையத்தை வரும் நிதி ஆண்டிற்குள் தனியார் மயமாக்க முடிவெடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/thameemkodai/posts/10158088265262737
Facebook Profile: https://www.facebook.com/bala.ashok.927/posts/768009160778697
Puthiya thalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2101726796650884
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 2, 2022
Ramkumar Kaliamurthy
February 17, 2021
Ramkumar Kaliamurthy
March 29, 2022