வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkதேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவா?

தேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மத்திய பட்ஜெட் 2021-22இல் தேர்தல் ஆணையத்தை வரும் நிதி ஆண்டிற்குள்  தனியார் மயமாக்க முடிவெடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

தேர்தல் ஆணையம் குறித்து பரவும் பதிவு
Source: Facebook

Fact Check/Verification

கொரானா காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 01/02/2021 அன்று தாக்கல் செய்தார்.

பாஜக தவிர்த்து மற்ற கட்சியைச் சார்ந்தவர்கள் இந்த பட்ஜெட் குறித்து மிகப்பெரிய அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட்டில் பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுக கழகம், IDBI வங்கி, பவன் ஹன்ஸ், கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இரண்டு பொதுத் துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் பங்கினை விற்று 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையத்தையும் தனியாருக்கு விற்க மத்திய முடிவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.

https://www.facebook.com/thameemkodai/posts/10158088265262737

Archive Link: https://archive.vn/DKxZc

https://www.facebook.com/bala.ashok.927/posts/768009160778697

Archive Link: https://archive.vn/10IQp

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

தேர்தல் ஆணையம் என்பது இரயில்வே, ஏர் இந்தியா போன்று வருமானம் ஈட்டித் தரும் நிறுவனம் அல்ல. இது நீதித்துறை  போன்ற ஒரு அரசு அமைப்பாகும். இதை யாரும் வாங்கவோ விற்கவோ இயலாது.

ஆகவே மத்திய பட்ஜெட்டில் தேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் கண்டிப்பாக பொய்யான ஒன்றாக இருக்க முடியும் என்று நாம் முடிவு செய்தோம்.

ஆயினும் இதை நிரூபிக்க சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புதியத் தலைமுறையின் புகைப்படச் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் இப்புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு பொய்யாக உருவாக்கப்பட்ட புகைப்படச் செய்தி என்பது நமக்கு உறுதியாகியது.

உண்மையான செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2101726796650884

Archive Link: https://archive.vn/ZYeFv

வாசகர்களில் புரிதலுக்காக உண்மைப் புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

2021-22 ஆண்டின் மத்தியப் பட்ஜெட்டை பரிகசிப்பதற்காகவே விஷமிகள் இவ்வாறு ஒரு பொய்யனப் புகைப்படச் செய்தியை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.

Conclusion

மத்திய பட்ஜெட் 2021-22இல் தேர்தல் ஆணையத்தை வரும் நிதி ஆண்டிற்குள்  தனியார் மயமாக்க முடிவெடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Satire

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/thameemkodai/posts/10158088265262737

Facebook Profile: https://www.facebook.com/bala.ashok.927/posts/768009160778697

Puthiya thalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2101726796650884


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular