மக்கள் தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

“கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.



Also Read: எரிபொருள் விலையுயர்வால் மக்கள் கஷ்டப்பட்டால் கவலையில்லை என்றாரா அண்ணாமலை?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மக்கள் தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ் 7 தமிழ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் பொறுப்பாளர் சுகிதா சாரங்கராஜனைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது போலியான நியூஸ்கார்ட் என்று விளக்கமளித்தார்.
இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அவரும் இத்தகவல் பொய்யானது என உறுதி செய்தார்.
Also Read: பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியவர் இந்தியரா? உண்மை என்ன?
Conclusion
நமது விரிவான ஆய்வுக்குப்பின், மக்கள் தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Newschecker Conversations
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)