Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Daily Reads
அரசு பள்ளியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதால் திமுகவினர் கைது செய்யப்பட்டதாக பத்திரிக்கைச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெண்கள் உட்பட 5 திமுகவினர் கள்ளச்சாராயம் காய்ச்சியதால், போலீசார் அவர்களை கைது செய்ததாக கூறி பத்திரிக்கை செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனைப் பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடமா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அரசு பள்ளியில் திமுகவினர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பத்திரிக்கை செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இச்செய்தி குறித்து தேடினோம்.
இத்தேடலில் தினமலரில் கடந்த ஆண்டு மே மாதம் “அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 பேர் கைது” என்று தலைப்பிட்டு மேற்கண்ட செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தததை நம்மால் காண முடிந்தது.
திருப்பூர் மாவட்டம், கருமாபாளையம் ஊராட்சி, செம்பாக்கவுண்டம் பாளையத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, துணை ஆய்வாளர்கள் சர்வேஸ்வரன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் திடீர் ரெய்டு நடத்தி, பள்ளி கழிப்பறை அருகே காஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சீனிவாசன் 55, ஆறுச்சாமி, 65, விக்னேஸ்வரன், 28, காயத்ரி, 23, சரசாள், 45 ஆகிய ஐவரை கைது செய்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்செய்தியில் எந்த ஒரு இடத்திலும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவையோ அல்லது மற்ற கட்சியையோ சார்ந்தவர்கள் என்று எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை.
தினமலரைத் தவிர்த்து தினமணி, மற்றும் பாஜக ஆதரவு ஊடகமான கதிர் நியூஸ் போன்றவற்றிலும் மேற்கண்ட நிகழ்வு குறித்து செய்தி வெளிவந்திருந்ததை நம்மால் காண முடிந்த்து. அவற்றிலும் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவினரைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கப்படவில்லை.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அரசு பள்ளியில் திமுகவினர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பரப்பப்படும் பத்திரிக்கை செய்தி எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது.
Also Read: பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்று பரவும் வதந்தி!
அரசு பள்ளியில் திமுகவினர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பரப்பப்படும் பத்திரிக்கைச் செய்தி எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025