நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

பரபரப்பாக நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் முடிவுகள் இம்மாதம் 2 ஆம் தேதி வெளியானது. இதில் திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் வென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக பதவியேற்றதிலிருந்து மக்கள் சார்ந்த பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் பல கோரிக்கைகளைதொடர்ந்து வைத்து வருகின்றார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்ததாத நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Archive Link: https://archive.ph/A712v

Archive Link: https://archive.ph/1N1sy

Archive Link: https://archive.ph/iNkH0
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கை வைத்ததாக வைரலாகும் நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தியைக் காணும்போதே அது எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.
ஆயினும் இந்த புகைப்படச் செய்தியை உண்மை என்று நம்பி பலர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்வதால் இதுக்குறித்து முறையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.
முதலில் நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் பிரிவைத் தொடர்புக் கொண்டு இச்செய்திக் குறித்து கேட்டோம். அவர்கள்,
“இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது பொய் செய்தி”
என்று நமக்கு விளக்கமளித்தனர்.
இதன்பின் நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இச்செய்தி குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் புகைப்படச் செய்தியின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு புலனாகியது.
இந்த கொரானா காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரானா நிவாரணத் தொகையாக ரூ.2000 வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதுக்குறித்த செய்தி நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படச் செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படச் செய்தியை எடிட் செய்தே எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்ட புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
தாயில்லாத பிள்ளைகள் நாங்கள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததாக பரவும் புகைப்படச் செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/photos/4635275333201305
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)