சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkபெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக வைரலாகும் புகைப்படம்!

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக வைரலாகும் புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம்

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் கடந்த மாதம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி கையில் பதாகை ஏந்தி  போராடியதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம் - 1

Twitter Link | Archive Link

எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம் - 2

Facebook Link

எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம் - 3

Facebook Link

Also Read:முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் தவறான வீடியோக்கள்!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்புகைப்படத்தின் பின்னனியில் இருக்கும் உண்மைத்தனமை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அதிமுக சார்பில் கடந்த ஜூலை மாதம் (28/07/2021) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Archive Link

அந்த ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டதுடன், “ஸ்டாலின் அரசே! நீட் தேர்வை ரத்து செய்ரேன் சொன்னது என்னாச்சு”   என்று எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்தி இருந்தார்.

உண்மைத்தன்மை
Source: Vikatan.Com

இச்சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படததை எடிட்செய்தே பாஜகவுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிடுக் காட்டியுள்ளோம்.

Also Read: ஹெலிகாப்டர் விபத்தில் மோடியை விசாரிக்க வேண்டும் என்றாரா சுப்ரமணியன் சுவாமி?

Conclusion

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered

Our Sources

Edappadi Palanisamy Twitter Handle

Vikatan

Hindu Tamil


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular