Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் கடந்த மாதம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி கையில் பதாகை ஏந்தி போராடியதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்புகைப்படத்தின் பின்னனியில் இருக்கும் உண்மைத்தனமை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அதிமுக சார்பில் கடந்த ஜூலை மாதம் (28/07/2021) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அந்த ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டதுடன், “ஸ்டாலின் அரசே! நீட் தேர்வை ரத்து செய்ரேன் சொன்னது என்னாச்சு” என்று எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்தி இருந்தார்.

இச்சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படததை எடிட்செய்தே பாஜகவுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிடுக் காட்டியுள்ளோம்.


Also Read: ஹெலிகாப்டர் விபத்தில் மோடியை விசாரிக்க வேண்டும் என்றாரா சுப்ரமணியன் சுவாமி?
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Edappadi Palanisamy Twitter Handle
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 1, 2025
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
July 23, 2025