புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkஎட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரினாரா?

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி கோரியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரியதாக பரவும் தகவல்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை கடந்த வியாழனன்று (17/06/2021) டெல்லியில் சந்தித்தார். இச்சந்திப்பில் தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்துள்ளார்.

இதுக்குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் முதல்வர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மோடியிடம் தந்த கோரிக்கை மனுவில் சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிதியுதவி கோரியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரியதாக பரவும் பதிவு - 1

Archieve

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரியதாக பரவும் பதிவு - 2

Archieve

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரியதாக பரவும் பதிவு - 3

Archieve

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?

Fact Check/Verification

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி கோரியதாக சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதன் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்த ஆய்வு செய்தோம்.

முதல்வர் பிரதமரிடம் வைத்த கோரிக்கை மனுக் குறித்த விவரங்கள் தமிழக அரசின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி வெளியீட்டில் 15 (e) -இல் “Chennai-Salem Greenfield Expressway” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரியதாக பரவும் பதிவின் அடிப்படை

இதனை அடிப்படையாக வைத்தே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு முதல்வர் நிதியுதவி கோரியதாக தகவல் பரப்பப்படுகின்றது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறான ஒன்றாகும்.

உண்மையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக் கோரியே முதல்வரின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு சார்பில் செய்தி வெளியீடும் வெளியிடப்பட்டுள்ளது.

Source: Government of Tamilnadu

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா?

Conclusion

முதல்வர் பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்ல முடிவெடுத்ததிலிருந்தே, இச்சந்திப்புத் தொடர்பாக பல பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வாறு பரப்பப்பட்ட செய்திகளை பொய் செய்திகள் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரங்களுடன் தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளோம்.

அதன் வரிசையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரியதாக பரவும் இத்தகவலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Government of Tamilnadu: https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr170621_292.pdf


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular