வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkமின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாரா செந்தில் பாலாஜி?

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாரா செந்தில் பாலாஜி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

கோவை மாநகராட்சி தேர்தலின்போது மக்களுக்கு கொலுசு மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுத்த காரணத்தால் டாஸ்மாக் மற்றும் மின்சார கட்டண உயர்வை தவிர்க்க இயலாது. எனவே மக்கள் இந்த கட்டண உயர்வை சந்தோசமாக ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் சமூக ஊடக அணியைத் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தனர்.

Also Read: கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்றாரா அண்ணாமலை?

Conclusion

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமது விரிவான ஆய்வுக்குப்பின் தெளிவாகின்றது.

இந்த உண்மையை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Sources

Newschecker Conversations


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular