Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதன்படி குற்றவாளிகளிக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்ப்பட்டது. அருண், குமார், சதீஷ், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஆறு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 12வது குற்றவாளியான சந்திரசேகருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜ் நல்ல மனிதர், காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்மீது இவ்வழக்கு புனையப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக அண்ணாமலை அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர், இது பொய்யான செய்தி, இவ்வாறு நான் பேசவே இல்லை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து இந்த தகவல் பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் பாலிமர் நியூஸ் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பாலிமர் நியூஸ் தரப்பினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று தெளிவுப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தேடியதில் தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: பெட்ரோல் விலை உயராது என்றாரா அண்ணாமலை?
நமது விரிவான ஆய்வுக்குப்பின், கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Newschecker Conversation
CTR NirmalKumar’s tweet on 09th March
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 26, 2025
Ramkumar Kaliamurthy
March 18, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 24, 2025