Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையேயான பதவிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த கலவரம் காரணமாக அதிமுக அலுவலகத்திற்க்லு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “அண்ணன் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை முடக்கி கட்சியை கைப்பற்ற நினைத்தால் தாமரை சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது
Also Read: WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இதில் ஓபிஎஸ் குறித்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அவர் பேசவே இல்லை.
ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், ஜூனியர் விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, ஜூனியர் விகடனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் ஜூனியர் விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
ஆகவே இதனைத் தொடர்ந்து விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று தெளிவுப்படுத்தினார்.
Also Read: மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா?
தேவைப்பட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
YouTube Video from News J, upoaded on 11/07/2022
Phone conversation with I.Britto, Vikatan, on 12/07/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 10, 2025
Ramkumar Kaliamurthy
July 7, 2025
Ramkumar Kaliamurthy
June 25, 2025