Sunday, March 16, 2025
தமிழ்

Fact Check

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்றாரா எடப்பாடி பழனிசாமி?

banner_image

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்தப் பார்க்கின்றது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய்தாக பரவும் நியூஸ்கார்ட்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதை எதிர்கொள்ள தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக தயாராகி கொண்டிருக்கின்றது.  

தமிழகத்தில்  எதிர் கட்சிகளாக விளங்கும் அதிமுகவும் இத்தேர்தலில் வெற்றி காண மும்முரமாக தயாராகி வருகிறது. இதற்கான பிரச்சாரத்தை முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழனன்று (23/09/2021) திருப்பத்தூரில் இருந்து தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், “கடந்த பத்து வருடங்களில் நான்கு வருடங்கள் மட்டுமே நான் ஆட்சி செய்தேன். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறு ஆண்டுகால ஆட்சியின் ஊழல்களையும் என் தலையில் கட்டப் பார்க்கின்றது திமுக அரசு” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஏபிபி நாட்டின்  நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய்தாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய்தாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய்தாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்தப் பார்க்கின்றது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை  ஏபிபி தமிழ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழனன்று திருப்பத்தூரில் தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, “ஆளுங்கட்சியான திமுக அரசு அவதூறு பரப்பும் நோக்கில் அதிமுகவினர் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கின்றார்கள். நானும் 4 ஆண்டுகள் 2 மாதம் முதல்வராக இருந்தேன். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் திமுகவினர் மீது போட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் செய்யவில்லை” என்று பேசினார்.

Archive Link

இந்த செய்தியை ஏபிபி நாடு நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

Archive Link

இச்செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து ஏபிபி நாட்டின் ஆசிரியர் மனோஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். அவரும்,

“வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை”

என்று நமக்கு விளக்கமளித்தார்.

Also Read: கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் ஈபிஎஸ் நடிக்கின்றார் என்றாரா மயில்சாமி?

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்தப் பார்க்கின்றது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக  பரவும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பது தெளிவாகின்றது.

Conclusion

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்தப் பார்க்கின்றது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

ABP Naadu

Thanthi TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.