திங்கட்கிழமை, மே 6, 2024
திங்கட்கிழமை, மே 6, 2024

HomeFact Checkவாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல்

Fact: வைரலாகும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். அவ்வீடியோவில் காணப்படுவது தேர்தல் முடிவுகள் அறிவித்தப்பின் வாக்கு சீட்டுகளை VVPAT இயந்திரங்களிலிருந்து எடுத்து, அந்த இயந்திரங்களை சீல் செய்து வைக்கும் வழக்கமான நிகழ்வாகும்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த வீடியோவில் சிலர் VVPAT இயந்திரங்களை கழற்றி உள்ளே இருக்கும் சீட்டுகளை வெளியே எடுப்பதை காண முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archive Link

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

Fact Check/Verification

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் @WeThePeople3009 என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 13 , 2022 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

இந்த பதிவுக்கு குஜராத்திலிருக்கும் பாவ்நகர் மாவட்ட கலெக்டர் பதிலளித்திருப்பதை காண முடிந்தது.

அப்பதிலில் கூறப்பட்டிருந்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு VVPAT-களிலிருந்து VVPAT சீட்டுகள் அகற்றப்பட்டு கருப்பு உறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த VVPAT-களை அடுத்த தேர்தல்களுக்குப் பயன்படுத்த முடியும்.  இந்த நிகழ்வின் முழு செயல்முறையும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு ஒரு பிரதி பாதுகாப்பு அறையில் (Strong Room) வைக்கப்படும். மற்றொரு பிரதி அந்த மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

இதனையடுத்து தேடுகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த கையேடிலும் இதே தகவல் கூறப்பட்டிருந்ததை காண முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல்

தொடர்ந்து தேடுகையில் இந்திய தேர்தல் ஆணையம் வைரலாகும் இத்தகவல் தவறானது என்று அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு தற்போது நடந்ததல்ல; 2022 ஆம் ஆண்டு நடந்துள்ளது.
  2. இந்நிகழ்வு குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத்தில் இன்னும் தேர்தலே நடக்கவில்லை.
  3. வைரலாகும் வீடியோவில் காணப்படுவது தேர்தல் முடிவுகல் அறிவித்தப்பின் VVPAT எந்திரங்களை அடுத்த தேர்தலுக்கு தயார்படுத்தும் நிகழ்வாகும். இதில் எந்த மோசடியும் இல்லை.

 Also Read: வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?

Conclusion

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தியில் பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Tweet from the user, @WeThePeople3009, Dated December 13, 2022
Tweet from Collector & District Magistrate, Bhavnagar, December 15, 2022
Tweet from Election Commission of India, Dated April 23, 2024
EVM Manual from Election Commission of India


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular