Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் – இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.
”விலைவாசிக்காக தேசபக்தியை இழப்பதா? பாகிஸ்தானிடமிருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் – அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?
பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் ABP Nadu வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். அப்போது, “மத்திய பிரதேசம்: தன்னிடம் கேட்காமல் தக்காளியை வைத்து சமையல் செய்ததால்! கணவனிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி. கணவருடன் சண்டையிட்டு சகோதரியின் வீட்டுக்குச் சென்றதாக போலீஸ் தகவல்” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அந்த நியூஸ்கார்டினை எடுத்தே குறிப்பிட்ட வைரல் கார்ட் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. மேலும், இதுகுறித்து ABP Nadu தரப்பில் அதன் இணை ஆசிரியர் ராஜா சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet from ABP Nadu, Dated July 13, 2023
Tweet from ABP Nadu, Dated July 13, 2023
Phone Conversation with Raja Shanmuga Sundram, ABP Nadu, Dated July 14, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 20, 2025
Kushel Madhusoodan
May 15, 2025