Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது. புதிய தலைமுறை மற்றும் நாதக தரப்பில் அதை உறுதி செய்து கொண்டோம்.
தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாதக கட்சி தொண்டர்கள் அனைவரும் அக்கட்சிக்கு திரள் நிதியாக அனுப்ப வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?
தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாதக கட்சி தொண்டர்கள் அனைவரும் அக்கட்சிக்கு திரள் நிதியாக அனுப்ப கட்சித்தலைவர் சீமான் கோரியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதிய தலைமுறை பெயரில் வெளியாகியுள்ள நிலையில் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தேடினோம். ஆனால், அவ்வாறு செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே, புதியதலைமுறையின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியை இந்த நியூஸ்கார்ட் குறித்து தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது; இந்த வகை நியூஸ்கார்ட் தற்போது நாங்கள் உபயோகிப்பதில்லை. புதிய வடிவமைப்பையே தற்போது உபயோகிக்கிறோம்” என்று விளக்கமளித்தார்.


தொடர்ந்து, இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தி பிரிவு செயலாளர் பாக்கியராஜிடம் இந்த செய்தி குறித்து கேட்டபோது, “வைரலாகும் செய்தி போலியானது” என்று உறுதி செய்தார்.
Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?
தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாதக கட்சி தொண்டர்கள் அனைவரும் அக்கட்சிக்கு திரள் நிதியாக அனுப்ப கட்சித்தலைவர் சீமான் கோரியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation With , Ivani, Puthiyathalaimurai Digital, Dated December 18, 2023
Phone Conversation With, Pakkiyaraj, NTK, Dated December 18, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
September 2, 2025
Ramkumar Kaliamurthy
August 26, 2025