Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
’தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பில்லை’, ‘டாக்ஸி மாஃபியா’ என்று பரவும் வீடியோ!
இத்தகவல் தவறானதாகும். திருமணமான தம்பதியை பெண் ஒருவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி சண்டையிட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
தமிழ்நாட்டின் டாக்ஸி மாஃபியா என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
விமான நிலையங்களில் டாக்ஸி ஓட்டுநர்கள் பெண் பயணி ஒருவரை பலவந்தமாக டாக்ஸிக்கு இழுத்து செல்வதாக அவ்வீடியோ பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையில் இது நடப்பதாகவும் , தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் இவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டமா இது?
தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பில்லை’, ‘டாக்ஸி மாஃபியா’ என்று பரப்பப்படும் வீடியோவில் காணப்படும் பெண் “என்னை கல்யாணம் பண்ணிட்டு அவகூட ஹனிமூன் போயிட்டு வரீயா”, “அவனை நம்பாத”, “அந்த பொம்பள பொறுக்கிய புடிங்க” போன்ற வார்த்தைகளை பேசுவதை கேட்க முடிந்தது.
இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம். அத்தேடலில் பாலிமர் நியூஸ் யூடியூப் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான வீடியோ வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில் மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற இளைஞர் ஒருவருடன் அவரது இன்ஸ்டாகிராம் காதலி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சண்டையிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அப்பெண்ணின் கையை பிடித்திருந்த நபர் அந்த இளைஞரின் உறவினர் என சண்டையிட்ட அப்பெண்ணே தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து தேடுகையில் விகடன், தந்தி டிவி, ABP நாடு, நியூஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியிகளிலும் இது காதல் விவகாரம் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி பார்க்கையில் டாக்ஸி ஓட்டுநர் பலவந்தமாக பெண்ணை டாக்ஸிக்கு இழுத்து சென்றார் என்று பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.
இதனையடுத்து தேடுகையில் தமிழ்நாட்டின் உண்மை சார்ப்பகமும் இத்தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலும் இது காதல் விவகாரம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பில்லை’, ‘டாக்ஸி மாஃபியா’ என்று பரப்பப்படும் வீடியோ தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Media report by Polimer News, dated March 27, 2025
Media report by Vikatan, dated March 27, 2025
Media report by Thanthi TV, dated March 27, 2025
Media report by ABP Nadu, dated March 27, 2025
Media report by News Tamil, dated March 27, 2025
X post by TN Fact Check, dated August 16, 2025
இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் பிரசுரமாகியுள்ளது. அச்செய்தியை இங்கே படிக்கலாம்.
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025
Ramkumar Kaliamurthy
October 25, 2025