Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: முதியவர் ஒருவர் ‘கோ பேக் மோடி’ பதாகையுடன் நிற்பதாக பரவும் படம்.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அப்படத்தில் இருப்பவர் பிரதமருக்கு ஆதரவான வாசங்களுடனே அப்பதாகையை பிடித்திருந்தார்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தார். பிரதமரின் இந்த வருகையை எதிர்த்து ‘கோ பேக் மோடி’ முழக்கம் நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது . மேலும் பிரதமர் வருகையை எதிர்த்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
இந்நிலையில் முதியவர் ஒருவர் ‘கோ பேக் மோடி’ என்று எழுதப்பட்ட பதாகை ஒன்றை கையில் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. வலைப்பேச்சு பிஸ்மி என்பவர் பதிவிட்டிருந்த பதிவை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருந்ததை காண முடிந்தது.
இவரை போலவே பல்ரும் இப்படத்தை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா?
முதியவர் ஒருவர் கோ பேக் மோடி பதாகையுடன் நிற்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপি-র হিন্দুত্ববাদী রাজনীতি?’ (பாஜகவின் இந்துத்துவா அரசியல் தென்னிந்தியாவில் ஏன் செயல்படவில்லை?) என்று தலைப்பிட்டு ஏப்ரல் 26, 2024 அன்று பிபிசி பெங்காலி வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.
ஆனால் அப்படத்தில் அப்பெரியவர் வைத்திருந்த பதாகையில் கோ பேக் மோடி என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. அதில் “நம்ம கோவை நம்ம அண்ணா, மீண்டும் மோடி வேண்டும் மோடி” என்கிற வாசகங்களே இடம்பெற்றிருந்தது. கூடவே அதில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் படமும் இடம்பெற்றிருந்தது.
இச்செய்தியில் இப்படமானது கெட்டி இமேஜஸ் தளத்திலிருந்து பெறப்பட்டதாக குறிப்பிட்டிருந்ததால், அந்த இணையத்தளத்திலும் அப்படம் குறித்து தேடினோம். அதில் கோயம்புத்தூரில் பாஜக ஆதரவாளர் ஒருவர் இந்த ஏப்ரல் 12, 2024 அன்று இப்பதாகையை பிடித்திருந்ததாக குறிப்பிட்டு இப்படமானது விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது.
Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?
முதியவர் ஒருவர் கோ பேக் மோடி பதாகையுடன் நிற்பதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அப்படத்தில் இருப்பவர் பிரதமருக்கு ஆதரவான வாசங்களுடனே அப்பதாகையை பிடித்திருந்தார். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from BBC Bangali, Dated April 26, 2024
Getty Images
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 10, 2025
Vasudha Beri
April 3, 2025
Ramkumar Kaliamurthy
February 22, 2025