Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் சாதரணமான ஒன்று, அதுகுறித்து பெரிதாக பேச வேண்டியதில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
தமிழக முதல்வர் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானதாகும்.
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.
பிரதமர் மோடி, கண்ணீர் சிந்தியதைக் கேலி செய்யும் வகையில் பிரபலமான அமெரிக்க செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் முதலை ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போன்று முகப்புப் பக்கத்தில் பதிவிட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இது தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 17, 2025
Ramkumar Kaliamurthy
July 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
July 16, 2025