Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினார்.
Fact: இத்தகவல் தவறானதாகும். இதை பாஜக தரப்பும் தினமலர் தரப்பும் உறுதி செய்துள்ளது.
பிரதமர் மோடி இம்மாதம் 20 ஆம் தேதி ஒடிசாவில் பரப்புரை செய்யும்போது, “பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவி தமிழ்நாடு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கும் நிலையில்,“மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகந்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அந்நிறுவனத்தின் சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மே 28, 2024 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டு பகிரப்பட்டிருக்கவில்லை.
தொடர்ந்து தேடுகையில் “தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி” என்று அண்ணாமலை பேசியதாக ஜனவரி 10, 2024 அன்று தினமலர் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என நம்மால் அறிய முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து தினமலரின் டிஜிட்டல் துறையை சார்ந்த தண்டபாணியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.
இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணியின் தலைவர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக் கொண்டு பேசுகையில், “இத்தகவல் தவறானது, அண்ணாமலை இவ்வாறு பேசவே இல்லை” என்று அவர் பதிலளித்தார்.
Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post from Dinamalar, Dated January 10, 2024
Phone Conversation with M.S.Balaji, State President, Social Media Cell, Tamilnadu BJP
Phone Conversation with Dhandapani, Dinamalar
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 7, 2025
Ramkumar Kaliamurthy
March 26, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 20, 2025