வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான்; வைரலாகும் நியூஸ்கார்ட்...

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்

சமீபத்தில் அமேசன் ஓடிடி தளத்தில் வெளியாகி நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் எனும் திரைப்படம் வெளியாகியது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது இருளர் இன மக்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கை அடிப்படையாக வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படம் தமிழகத்தின் பூர்வக் குடியான பழங்குடி மக்கள் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சென்று அனைவர் மனதையும் கலங்க செய்துள்ளது.  தமிழக முதல்வர் தொடங்கி பல பிரபலங்கள் இப்படத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் இத்திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இத்திரைப்படத்தில் வில்லனாக வரும் நபரின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த தினசரி காலண்டரில் இருந்த படமானது ஒரு குறிப்பிட்ட சாதியினரை குறிப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அந்த காலண்டரில் இருந்த படத்தை மாற்றினர்.

இருப்பினும் இத்திரைப்படமானது குறிப்பிட்ட சாதியினரை தவறாக சித்தரிக்கவே எடுக்கப்பட்டது என்று ஒரு சாரார் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: சென்னை வெள்ளம் என்று குஜராத் வெள்ள பாதிப்பு படத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும்  நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துரு (Font) புதிய தலைமுறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துருவிலிருந்து வேறுபட்டிருந்தது. அதேபோல் இதில் பயன்படுத்தப்பட்டிருந்த படம் புதிய தலைமுறை லோகோவை மறைத்து, அதற்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கும் மேல் இயக்குனர் பெயர் ஞானவேல் ராஜா குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் பெயர் ஞானவேல் ராஜா அல்ல, அவர் பெயர் ஞானவேல் ஆகும்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே இது போலியாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால், இந்த நியூஸ்கார்டை புதிய தலைமுறை பிரசுரித்ததா என்பதை உறுதி செய்ய, அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் சரவணன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.

இதற்கு அவர்,

“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”

என்று விளக்கமளித்தார்.

Also Read: சென்னை மழை மக்களுக்கு வருணபகவான் கொடுத்த தண்டனை என்று பேட்டியளித்தாரா அர்ஜூன் சம்பத்? உண்மை என்ன?

Conclusion

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா கூறியதாக சமூக வலைத்தளங்களில்  வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Mr. Saravanan, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular