Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பங்களாதேஷில் உடைக்கப்படும் இந்து கோவில்கள்
Fact: வைரலாகும் வீடியோ மேற்கு வங்க காளி பூஜையுடன் தொடர்புடையதாகும்.
வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது. இந்துக்கள் நாடோடிகளாக விரட்டப்படுகிறார்கள். உணர்வுள்ள இந்துக்களே உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?
வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Danik Stateman என்கிற செய்தி ஊடகத்தில் கடந்த அக்டோபர் 21, 2024 அன்று வெளியாகியிருந்த பெங்காலி கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது.
அதில், பர்தமான் மாவட்டம், கந்தகோஷில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை காளி சிலை வடிவமைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு கரைக்கப்படுவது வழக்கம் என்று செய்தி வெளியாகியிருந்தது. இச்சிலை மிகப்பெரியதாக இருப்பதால் அதனை பாகங்களாகப் பிரித்து கரைக்கும் நடைமுறையும் இருப்பது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, Sultanpur Kiranmoyi Pathagar என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் இதுகுறித்து இடம்பெற்றுள்ளது. அதில் உள்ள சிலைவடிவமும், அதன்பின்புற சுவரும் வைரல் வீடியோவில் உள்ள சிலை மற்றும் சுவருடன் ஒத்துப்போவதையும் நம்மால் காண முடிந்தது.
நியூஸ்செக்கர் சார்பில் சுல்தான்பூர் காளி பூஜை குழுவைச் சேர்ந்த கார்த்திக் தத்தா என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த காளி பூஜையில் வைக்கப்படும் காளி சிலையை பக்தர்களே தனியாக பிரித்து கரைப்பது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் நடைபெற்ற நிகழ்வு தவறான மத நோக்கில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று விளக்கமளித்தார்.
Also Read: சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report by Dainik Statesman, Dated October 21, 2024
Telephonic conversation with Kartic Dutta, Organiser, Sultanpur Kali Puja
(இக்கட்டுரை நம்முடைய நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 22, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 21, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 7, 2024