Fact Check
கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Claim
கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்.
Fact
வைரலாகும் தகவல் தவறானதாகும். வைராலாகும் வீடியோ கரூர் சம்பவத்திற்கு முந்தைய பழைய வீடியோவாகும்.
தவெக தலைவர் விஜய் நேற்றைய முன் தினம் (செப்டம்பர் 27) கரூரில் பரப்புரை செய்துக்கொண்டிருந்தபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக 41 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விமான நிலையத்தில் எதுவும் நடக்காததுபோல் சிரித்துகொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
Fact Check/Verification
தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் ஜீ தமிழ் நியூஸின் எக்ஸ் பக்கத்தில் செப்டம்பர் 21, 2025 அன்று“பிரச்சார பயணம் முடிந்து சென்னை திரும்பிய விஜய்!” என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது கரூர் சம்பவம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே இப்பதிவானது வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் “chennai_airport_atrocities” எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 20, 2025 அன்று இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதாவது கரூர் துயர சம்பவம் நடப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்பே இவ்வீடியோ பகிரப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வீடியோ செப்டம்பர் 20 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் சிரித்துக்கொண்டே சென்றதாக பரவும் தகவல் தவறானது என உறுதியாகின்றது.
Conclusion
தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். வைராலாகும் வீடியோ கரூர் சம்பவத்திற்கு முந்தைய பழைய வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Zee Tamil News, dated September 21, 2025
Instagram post by chennai_airport_atrocities, dated September 20, 2025