Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழ்நாட்டில் நெற்றியில் நாமம் மற்றும் கோவணத்துடன் ஒருவர் மின்கட்டணம் செலுத்தினார்.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.
நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு கோவணத்துடன் ஒருவர் மின்கட்டணம் செலுத்தியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்நிகழ்வானது தமிழகத்தில் நடந்ததாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?
தமிழ்நாட்டில் நெற்றியில் நாமம் மற்றும் கோவணத்துடன் ஒருவர் தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்தியதாக பரவும் வீடியோவை காண்கையில், அவ்வீடியோவில் காணப்படும் நபர் புதுச்சேரியில் மின்கட்டணம் அதிகமுள்ளதாகவும் அதை தெரிவிக்கும் விதமாக கோவணத்துடன் வந்திருப்பதாகவும் கூறுவதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடுகையில் இந்து தமிழில் “புதுச்சேரி: மக்கள் கஷ்டத்தை எடுத்துச் சொல்ல கோவணத்துடன் மின் கட்டணம் செலுத்தவந்த சமூக ஆர்வலர்” என்று தலைப்பிட்டு இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் இச்சம்பவமானது புதுச்சேரி உப்பளத்திலுள்ள மின்துறை அலுவலகத்தில் நடந்தததாகவும், சுத்தம் சுந்தரராஜன் என்பவர் இவ்வாறு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இந்த சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாக கூறி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து தேடுகையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சுத்தம் சுந்தரராஜன் எனும் இந்நபர் புதுச்சேரியில் ஏற்கனவே இதுப்போன்ற நூதன போராட்டங்களை செய்திருப்பதை காண முடிந்தது. இதுக்குறித்த செய்திகள் டைம்ஸ் எக்ஸ்பி தமிழ், மற்றும் நியூஸ் 18 தமிழில் வெளிவந்துள்ளது.
Also Read: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் 2022ஆம் ஆண்டு வீடியோ!
தமிழ்நாட்டில் நெற்றியில் நாமம் மற்றும் கோவணத்துடன் ஒருவர் மின்கட்டணம் செலுத்தியதாக பரவும் வீடியோவில் காணப்படும் சம்பவம் புதுச்சேரியில் நடந்ததாகும். இச்சம்பவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Hindu Tamil, Dated July 18, 2024
Report from Times XP, Dated January 11, 2024
Report from News 18 Tamil, Dated April 10, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)