Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

banner_image

Claim

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் மர்ம கும்பலுக்கு யார் அனுமதி கொடுத்தது

Fact

image

வைரலாகும் வீடியோ செய்தி வதந்தியைப் பரப்பும் வகையில் பரப்பப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன்  கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ, “Hello @tnpoliceoffl This is happening in Arena of Meenakshi Amman Temple, Madurai. It can lead to riots. @Maduraidistpol1
, Plz take necessary action”
என்று Voice of Hindu என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்தது.

Screenshot from X @Warlock_Shubh

X Link/Archived Link

Screenshot from X @Tnagainstnaxals

X Link/Archived Link

தமிழில் ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் மர்ம கும்பலுக்கு யார் அனுமதி கொடுத்தது @mkstalin  @PKSekarbabu அவர்களே இந்துக்கள் பாவத்தை சேர்த்து கொண்டே போகாதீர்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவிலேயே அது ஆடா, மாடா என்று தெரியவில்லை என்றும் வடமொழியில் பேசியுள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து மதுரை மீனாட்சி கோயில் சுற்றுவட்டாரப்பகுதியில் விசாரித்தோம். அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேல கோபுரம் அருகில் மேல மடத்து சந்து என்கிற இடத்தில் வசித்து வருகிறார் சிவராமன் என்கிற சாமியாடி. குறிசொல்பவரான இவர் பக்தர்கள் தரும் காணிக்கையை சேர்த்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் கிடா அறுத்து அன்னதானம் செய்து வருகிறார்.  இந்நிலையில், இந்த வருடமும் அவ்வாறு ஆடுகளை அறுத்தபோது அதனை வீடியோ எடுத்து சிலர் அவதூறாக அவர் மாடுகளை வெட்டுவதாக பரப்பியுள்ளனர் என்பது நமக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து சிவராமனை தொடர்பு கொண்டு பேசியபோது, ”பக்தர்களிடம் காணிக்கை பெற்று பல வருடங்களாகவே இந்த நடைமுறையை செய்து வருகிறோம். ஜாதி, மத வேறுபாடு இன்றி ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வருகிறேன்.

ஆனால், தவறான முறையில் இதை சித்தரித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.” என்று விளக்கமளித்தார்.  வழிபாட்டிற்காக எளியோர்க்கு அன்னதானம் அளிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வை தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.

Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.  

Sources
Phone Conversation With, Sivaraman, Dated February 19, 2025

RESULT
imageFalse
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.