Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது – ஜெயக்குமார்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். புதியதலைமுறை இச்செய்தியை வெளியிடவில்லை.
எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அம்மா வழங்கிய செங்கோலே பெரிது! ஆதீனம் வழங்கிய செங்கோலை விட நீளத்திலும் தடிமனிலும் மிகவும் பெரியதான செங்கோலை புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.ஆனால் இதை பாஜக போல் அல்பத்தனமாக விளம்பரப்படுத்திக்கொள்ளும் வழக்கம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” என்பதாக குறிப்பிட்ட நியூஸ்கார்ட் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: பிரதமர் மோடி கைகளில் கொடுக்கப்பட இருப்பது சோழர் கால செங்கோலா?
எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவ்வாறு கூறியதாக புதியதலைமுறையின் சமூக வலைத்தளப்பக்கத்தில் செய்தி ஏதேனும் இடம்பெற்றிருக்கிறதா என்று ஆராய்ந்தோம். அவர் இவ்வாறு கூறியதாக வேறு எந்த ஊடகங்களிலும் செய்தி இடம்பெற்றிருக்கவில்லை.
நம்முடைய தேடலில், வைரலாகும் குறிப்பிட்ட நியூஸ்கார்டை புதியதலைமுறை வெளியிடவில்லை என்பதாக, “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் மற்றும் செய்தி போலியானது” என்று விளக்கமளித்தார்.
Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?
எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated May 25, 2023
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated May 26, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 19, 2025