திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024
திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

HomeFact Checkபிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டாரா?

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ அக்டோபர் 24 நாள் எடுக்கப்பட்டதாகும். ஆனால் அக்டோபர் 23 ஆம் நாளன்றே பிரதமர் இந்தியா திரும்பிவிட்டார். அக்டோபர் 24 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்துக்கொண்டார்.

16ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவில் அக்டோபர் 22 முதல் 24 வரை நடைப்பெற்ற நிலையில், “பிரிக்ஸ் மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியின் போது விரட்டியடிக்கப்பட்ட மோடி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.

X Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: துர்கா ஸ்டாலின் வெள்ளியில் செய்த பீரோ வாங்கியதாகப் பரவும் தகவல் உண்மையா?

Fact Check/Verification

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவில் பிரதமர் மோடி இல்லாமல் இருந்தாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருப்பதை காண முடிந்தது.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.
வைரல் வீடியோவில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் இருக்கும் காட்சி

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே உரிய கீ வேர்டுகளை பயன்படுத்தி இதுக்குறித்து இணையத்தில் தேடினோம். இத்தேடலில் ‘Jaishankar backs ‘fair and durable approach’ to end Israel-Hamas conflict’ என்று தலைப்பிட்டு இந்துஸ்தான் டைம்ஸில் அக்டோபர் 24, 2024 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இச்செய்தியில் பிரதமர் மோடி இந்தியா திரும்பியதை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெசங்கர் இந்தியா சார்பாக பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக நடந்த கூட்டத்தில் (BRICS Plus/Outreach session) கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.
இந்துஸ்தான் டைம்ஸில் வந்த செய்தி

இதனையடுத்து தேடியதில் பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துவிட்டு அக்டோபர் 23 ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார் என்பதை ANI-யின் எக்ஸ் பதிவின் வழியாக அறிய முடிந்தது.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.

ஆனால் ஜெய்சங்கர் கலந்துக்கொண்ட கூட்டமானது (BRICS Plus/Outreach session) பிரதமர் நாடு திரும்பிய பிறகு அக்டோபர் 24 ஆம் தேதியே நடந்துள்ளது. இந்த உண்மையானது ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ இணையத்தள செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.
ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ இணையத்தள செய்தி

இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் தவிர்த்து, மற்ற அதிகாரப் பதவியில் இருக்கும் தலைவர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து தேடியதில் அக்டோபர் 24 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் (BRICS Plus/Outreach session)எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோவை ANI அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டார்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பிரதமர் நாடு திரும்பிய பிறகு நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, பிரதமர் விரட்டியடிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகின்றது என அறிய முடிகின்றது.ல் வைரலாகும் வீடியோ தவெக மாநாட்டு பந்தலில் எடுக்கப்பட்டதல்ல; குலசை தசரா திருவிழாவில் எடுக்கப்பட்டது என தெளிவாகின்றது.  

Also Read: அதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் அரிவாளுடன் கொலை மிரட்டல் என்று பரவுவது சமீபத்திய வீடியோவா?

Conclusion

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் கூட்டம் (BRICS Plus/Outreach session) நடக்கும்போது பிரதமர் மாநாடு நடந்த நாடான ரஷ்யாவிலேயே இல்லை. அக்கூட்டம் நடப்பதற்கு முந்தைய நாளே நாடு திரும்பிவிட்டார்.

அக்கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக்கொண்டார். அவர் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Hindustan Times, Dated October 24, 2024
X Post from ANI, Dated October 23, 2024
X Post from ANI, Dated October 24, 2024
Report from Official website of President of Russia, Dated October 24, 2024


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular