செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024

HomeFact CheckFact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன்...

Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஒடிசா பஹானாகா ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகமது ஷெரீப் அகமது.

Fact: வைரலாகும் செய்தி போலியாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட விபத்து நடந்த ஒடிசா பஹானாகா பஜார் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவு என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இதுவரை, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது அது நடந்த ரயில் நிலையத்தின் பெயர். பஹானாகா நிலையம். இந்த நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகமது ஷெரீப் அகமது. விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதில் இருந்து முகமது ஷெரீப் அகமது தலைமறைவாக உள்ளார்.” என்று புகைப்படத்துடன் ஒரு செய்தி பரவுகிறது.

முகமது ஷெரீப் அகமது
Screenshot from Twitter @senthilkumarpcm

Archived Link

முகமது ஷெரீப் அகமது
Screenshot from Twitter @ananthamharshi

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Fact Check/Verification

முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட விபத்து நடந்த ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவு என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

கீவேர்டுகள் மூலமாக இதுகுறித்து தேடியபோது ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பஹானாகா பஜார் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் எஸ்.பி.மொகந்தி என்று இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

OTV வெளியிட்டுள்ள வீடியோவில் ரயில் நிலையப் பணியாளர்கள் பட்டியலில் எஸ்.பி.மொகந்தி என்றே ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் இடம்பெற்றுள்ளது.

கலிங்கா டிவி வெளியிட்டுள்ள செய்தியில் ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற ரயில் நிலையத்தில் பணியிலிருந்த அசிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் எஸ்.பி.மொகந்தி தலைமறைவு என்றே செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”Kottavalasa Kirandul KK Line” என்று vikaschander என்கிற இணையதளப்பக்கத்தில் வெளியாகியிருந்த கட்டுரை நமக்குக் கிடைத்தது. அதில், வைரலாகும் புகைப்படம் 2004ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பஹானாகா பஜார் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் அகமது அல்ல; தகவல் தவறாகப் பரவுகிறது என்பது இதன்மூலமாக உறுதியாகிறது.

Also Read: தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா?

Conclusion

முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட விபத்து நடந்த ஒடிசா பஹானாகா பஜார் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவு என்று பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, India Today, Dated June 05, 2023

vikaschander Album Story


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular