Claim: கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதி
Fact: சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக செய்த செயலாகும்
கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க தேசத் துரோகிகள் முயன்றதாக கூறி ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த சிறுவனை ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க தேசத் துரோகிகள் முயன்றதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் வீடியோவில் இருக்கும் சிறுவனை ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கையில், அவன் தேவநகரை சேர்ந்தவன் என்று கூறுவதை கேட்க முடிந்தது. அதேபோல் அவன் பேசும் கன்னட மொழி உச்சரிப்பானது காலபுரகி உள்ளிட்ட கல்யாண் கர்நாடகா பகுதிகளில் பேசும் உச்சரிப்பாக இருந்ததையும் காண முடிந்தது.
இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் காலபுரகி இரயில் நிலையத்தின் அருகில் தேவநகர் எனும் பகுதி இருப்பதை அறிய முடிந்தது.

அதேசமயம் இந்த நிகழ்வு குறித்து செய்திகள் ஊடகங்களில் வந்திருக்கவில்லை.
இதனையடுத்து பிரஜாவாணி கன்னடப் பத்திரிக்கையின் காலபுரகி பத்திரிக்கையாளரான மனோஜ் குமாரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு இந்த வீடியோ குறித்து விசாரித்தோம். அவர், இந்த நிகழ்வு 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதுக்குறித்து எந்த விதமான புகாரோ, வழக்கோ பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.
காலபுரகியிலிருக்கும் வாடி ரயில்வே ஸ்டேஷனின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவை தொடர்புக் கொண்டு இந்நிகழ்வு குறித்து விசாரித்தோம். அவரும் இந்நிகழ்வானது 2018-ல் நடந்தது என்றும், இதுக்குறித்து புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக கற்களை வைத்து விளையாடியுள்ளனர். இது தவிர்த்து பெரியதாக எதுவும் இல்லை. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்த பழைய வீடியோ மீண்டும் பரவியுள்ளது. சீனியர் ரயில்வே போலீசார் கூட இந்நிகழ்வுக் குறித்து விசாரித்தனர்” என்றார்.
Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
Conclusion
கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க தேசத் துரோகிகள் முயன்றதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Conversation With Manoj Kumar Guddi, Senior Correspondent, Prajavani Daily Kalaburagi
Conversation With M. Pasha, Police Sub Inspector of Wadi Railway Station
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)