ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்படவில்லையா?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்படவில்லையா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை.

Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் திரௌபதி முர்மு அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டார். வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.

நேற்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், திரௌபதி முர்மு  குடியரசுத் தலைவராகவே இருந்தாலும், அவர் பழங்குடி சமூகத்தவர் மற்றும் விதவை என்பதால் அவரை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை என்று கோயில் நிர்வாகம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று பரவும் தகவல்

X Link | Archived Link

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று பரவும் தகவல்

Facebook Link

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

அத்தேடலில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக ANI புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அப்படத்தில் திரௌபதி முர்முவுடன் ராமர் கோவில் கமிட்டியின் தலைவர் நிரிபேந்திரா மிஸ்ரா, விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆலோக் குமார், ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் லாம் ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில நிறுவனங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து தேடுகையில் குடியரசுத் தலைவரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்ததை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி காண்கையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கவில்லை என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.

இதனையடுத்து வைரலாகும் இந்த பொய் தகவலானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

அத்தேடலில் புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் இதுபோன்ற நியூஸ்கார்டு இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்

Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?

Conclusion

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from ANI, Dated Jan 12, 2024
Tweet from President of India, Dated Jan 21, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Self Analysis


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular