ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளாரா?

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளார்.

Fact: இத்தகவல் தவறானது என்று நாதக தரப்பும், புதிய தலைமுறை தரப்பும் தெளிவு செய்துள்ளது.

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் பதவி வகித்து வரும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக சீமானின் மனைவி கயல்விழி நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாக பரவும் தகவல்

X Link | Archived Link

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாக பரவும் தகவல்

Archived Link

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாக பரவும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, முன்னதாக நாதகவின் செய்தி தொடர்பாளர் செ.பாக்கியராசனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை’ என்று பதிலளித்தார்

Also Read: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்படவில்லையா?

Conclusion

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Pakkiarasan, Spokesperson, NTK
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular